திரு. S. சண்முகம் BE,MS., MISTE.,
நாம் நலமுடனும், ஆரோக்கியமாகவும் சிறப்புடன் வாழ உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு நாம் கூறும் பொதுவான காரணம், “நேரமில்லைங்க” என்பதுதான். உணவுக் கட்டுப்பாட்டில் நாம் கவனம் செலுத்தாதற்கு நாம் சொல்லும் காரணம் , ” எங்க வேலை அந்த மாதிரிங்க, செம வொர்க் பிரஷ்ஷ்ர்ங்க”. ஆனால் நம்மைக் காட்டிலும் அதிக வேலைப் பளுவுடனும், நேரமில்லாமலும், அதிக மன அழுத்தத்துடனும் இருக்கும் பலர் இதை இலாவகமாக கையாள்கிறார்கள்..
எனவே, நம் சூழலில் வாழும் அத்தகைய பெரியோர்களைக் கண்டு அவர்கள் தமது உடல் நலனை எவ்வாறு பேணிக் காக்கிறார்கள் என்பதை கூறும் பகுதியே இது. அவர்களின் வாழ்க்கை முறை, உடற்பயிற்சிக்கு அவர்கள் செலவிடும் நேரம், எந்த மாதிரியான உடற்பயற்சிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள், எந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது , நாமும் அவ்வாறே நமது உடல் நலனை பேணிக் காப்பதற்கு அது ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
முனைவர். R.நந்தகோபால் Ph.D.,
பார்வையில் கனிவு. சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரையும் சரிசமமாய் நோக்கும் அன்பான குணம். சாதாரணமாய் கோபப்பட வைக்க முடியாத முகத்தோற்றம். தெளிந்த தெள்ளறிவும் பட்டறிவு கொடுத்த அனுபவமும் கொடுத்த நிதானம். எத்ற்கும் பதட்டமடையாமல் பொறுமையாய் அனைத்தையும் கையாளும் பக்குவம். இவை அனைத்திற்கும் சொந்தக்காரர், இந்தத் தொடருக்காக இந்த முறை நாம் சந்திக்கப்போகும் பிரபலம், கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்விக் கூடத்தின் இயக்குனர் முனைவர். R.நந்தகோபால் Ph.D. அவர்கள்.
“வாங்க உட்காருங்க” என்று அன்பாய் உபசரிக்கிறார். “என்ன சாப்ட்றீங்க” என்ற அவரது உன்மையான உபசரிப்பில் அவருடைய அன்பு மிளிர்கிறது. எந்தவித பந்தாவுமின்றி எளிமையான கொங்குத் தமிழில் நம்மிடையே உரையாடுகிறார்.
முனைவர்.திருமதி. K. சித்ரா Ph D.,
பொதுவாக நமது பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. வீடு, கணவன், குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்களாயிருந்தால் ஆபீஸ் என்று அவர்கள் நினைவு முழுவதுமே மற்றவருக்குத்தான். மேலும், போதும் போதாதற்கு வீணாய்ப் போகிறதே என்று மிச்சம், மீதி, பழையது என்று எல்லாவற்றையும் உண்கிறார்கள். “அதான் நாள் பூரா வேலை செய்கிறோமே, தனியா எக்ஸர்ஸைஸ் வேற வேணுமா?” என்று உடற்பயிற்சிகளிலும் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
உண்மையில் அவர்கள்தாம் தமது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். வேலைக்கும் போய், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தமது உடல் நலத்தையும் சரிவர பேணிகாக்கும் பல பெண்கள் நம்மிடையே உண்டு. அவ்வாறான பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதன் மூலம், நமது பெண்களும் தமது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வார்கள் என்பது எமது நம்பிக்கை. “பிரபலங்கள் வழங்கும் ஹெல்த் டிப்ஸ்” என்ற இப்பகுதியில் இந்த முறை நாம் சந்திக்கப்போகும் பிரபலம்: முனைவர். திருமதி. K. சித்ரா Ph.D., அவர்கள்.
Read More →
திரு. E.S. கதிர்
“பிரபலங்கள் வழங்கும் ஹெல்த் டிப்ஸ்” என்ற பகுதியில் நாம் இம்முறை சந்திக்கப் போகும் பிரபலம் கதிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. E..S. கதிர் அவர்கள்.
கதிர் பொறியியல் கல்லூரி, கதிர் கல்வியியல் கல்லூரி, கதிர் வித்யா மந்திர் (CBSE ) பள்ளி என்று பல்வேறு கல்விப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். தற்போது கதிர் கலை அறிவியல் கல்லூரிக்கான ஆரம்பப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவரின் தந்தை முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு. K. A.செங்கோட்டையன் அவர்கள்.
திரு. கதிர் அவர்களின் துணைவியார் திருமதி. லாவண்யா கதிர் அவர்கள் கதிர் கல்விக் குழுமத்தின் செயலாளராக கணவரின் கல்விப் பணிக்குத் துணைபுரிகிறார். +2 படிக்கும் ஒரே மகன் என்று “அளவான குடும்பம்”.
கதிர் பொறியியல் கல்லூரி, கதிர் கல்வியியல் கல்லூரி, கதிர் வித்யா மந்திர் (CBSE ) பள்ளி என்று பல்வேறு கல்விப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். தற்போது கதிர் கலை அறிவியல் கல்லூரிக்கான ஆரம்பப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவரின் தந்தை முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு. K. A.செங்கோட்டையன் அவர்கள்.
திரு. கதிர் அவர்களின் துணைவியார் திருமதி. லாவண்யா கதிர் அவர்கள் கதிர் கல்விக் குழுமத்தின் செயலாளராக கணவரின் கல்விப் பணிக்குத் துணைபுரிகிறார். +2 படிக்கும் ஒரே மகன் என்று “அளவான குடும்பம்”.
திரு.சேட்டு
நாம் என்றாவது பறவைகளைக் கவனித்திருக்கிறோமா? குருவி, மைனா போன்ற சிறிய பறவைகளோடு பேசியிருக்கிறோமா? நமது சமூக வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருக்கின்ற காகத்தோடு நாம் உரையாடியிருக்கிறோமா? உடல் முழுக்கக் கருமையும் கழுத்துப் பகுதியில் மட்டும் சாம்பல் நிறமோடு சிறிய அலகால் கொத்தித் தின்னும் அந்த எளிய பறவையை மிக அருகில் பார்த்து அதன் அழகில் மெய் மறந்து போயிருக்கிறோமா? குயிலின் குரலை இனிமை என்று எல்லோரும் சொல்வோம்.மயில் அழகு என்று எல்லோரும் கொண்டாடுவோம். ஆனால் , “ காக்கையின் சிறகில் நந்தலாலா “ வைக் காண ஒரு பாரதியால்தான் முடியும். அவ்வாறு தினசரி காக்கைளோடும், மைனாக்களோடும், சிறு குருவிகளோடும் உரையாடியபடியே தினசரி தனது நாளைத் தொடங்கும் ஒரு எளிய மனிதரின் நல்வாழ்வுப் பழக்கங்களை இந்த முறைப் பார்க்கப் போகிறோம். பேருக்குத்தான் எளிய மனிதர் என்றாலும் வகிக்கும் பதவிகளும், ஆற்றும் பணிகளும் எழுத ஒரு 40 பக்க நோட்டு கொள்ளாது,
0 comments:
கருத்துரையிடுக